For Daily Alerts
Just In
ஏப்ரல் 5ல் கருணாநிதியை சந்திக்கிறார் சோனியா
டெல்லி:வரும் ஏப்ரல் 5ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆடிட்டோரிய திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகம் வருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது வரும் லோக்சபா தேர்தல் குறித்தும், கூட்டணி விவகாரங்கள் குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்துவர் எனத் தெரிகிறது.
Comments
Story first published: Thursday, March 27, 2008, 13:21 [IST]