For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிலையன்ஸ் வேட்பாளர் வெற்றி-சிபு சோரனுக்கு 'அல்வா'

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில், சிபு சோரன் கட்சி வேட்பாளருக்கு, அவரது கட்சியினரே ஓட்டு போடவில்லை. மாறாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நிறுத்திய வேட்பாளர் வென்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், சிபுசோரன் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராக கிஷோர் லால் போட்டியிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளர் என்.சிங் போட்டியிட்டார்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பரிமல் நத்வானி மற்றும் ஆர்.கே. ஆனந்த் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், சிபுசோரன் கட்சி வேட்பாளர் கிஷோர் லாலுக்கு அவரது கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும், எட்டு பேர் மட்டுமே வாக்களித்தனர்.

காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஆர்.கே. ஆனந்துக்கு ஆதரவு அளித்தன. இதனால் சிபுசோரன் ஆதரவாளர் தோற்றார்.

பாஜக வேட்பாளர் சிங், 35 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார்.

அதே போல ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பரிமல் நத்வானியும் வெற்றி பெற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X