துபாயில் காணாமல் போன தமிழர் கொடூரக் கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன தமிழரின் முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தஞ்சை வடக்கு, திருநறையூரைச் சேர்ந்தவர் அப்துல் காதரின் மகன் அப்துல்லாஹ். இவர் கடந்த 15 வருடங்களாக துபாயில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் இவர் காணாமல் போனார்.
இவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு துபை ஜுமைரா
கடற்கரையில், முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications