போலி ஜாமீனில் 150 கைதிகள் விடுதலை: மீண்டும் துருவுது போலீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலி ஜாமீன் கொடு்த்து 150 கைதிகள் விடுதலையான வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 98 மற்றும் 99ம் ஆண்டுகளில் சுமார் 150 கைதிகள் போலி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவரத்தை 2000ம் ஆண்டில் உளவு பிரிவு போலீசாரும், சிறை உயர் அதிகாரிகளும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சென்னை சிறை உயர் அதிகாரிகள் மற்றும் சிறை துறை உயர் அதிகாரிகள் அப்போதைய சிறை கண்காணிப்பாளர் ராஜன், ஜெயிலர் ராஜேந்திரன், வார்டன்கள் பாலகிருஷ்ணன், கோவிந்தன் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வார்டன்கள் பாலகிருஷ்ணன், கோவிந்தன் உள்பட 4 வார்டன்களின் தவறான நடவடிக்கையால் போலி ஜாமீன் மூலம் 150 கைதிகள் வெளியே சென்றது தெரியவந்தது.
இதன் பேரில் 4 வார்டன்களையும் பாளை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாகர்கோவில் மற்றும் நாங்குநேரி சிறைகளில் சில ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 4 வார்டன்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இவ்வழக்கில் குற்றம் நிருபிக்கப்படவில்லை என கூறி வார்டன்களை கோர்ட் விடுவித்தது.
இந்நிலையில் தற்போது இவ்வழக்கினை மீண்டும் விசாரணை நடத்துமாறு சிறை துறை ஏடிஜிபி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன் பேரில் நாகர்கோவில் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் தியோடர் செல்வின் உள்பட 4 உயர் அதிகாரிகள் பாளை சிறையிலுள்ள வார்டன்கள், சென்னை பூழல் மத்திய சிறையில் தற்போது பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், அரசு தரப்பு சாட்சி (அப்போதைய பாளை ஜெயிலர்) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணை அதிகாரிகள் நெல்லை, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திலுள்ள சில அதிகாரிகள், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகியவற்றுள்ள சில வார்டன்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இவ்விசாரணை வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
விசாரணை அறிக்கை சிறை துறை ஏடிஜிபி சுப்பிரமணியனிடம் அளிக்கப்பட உள்ளது. இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடந்து வருவதால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications