ஆப்கானில் மின் நிலையம் சிதறடிப்பு-பலர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் மின் நிலையத்தின் மீது தாலிபான்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பலர் பலியாயினர். இதி்ல் அந்த மின் நிலையமும் பலத்த சேதமடைந்தது.
தெற்கு ஆப்கானில் உள்ள கிரிசிக் மாகாணத்தில் உள்ள ஹெல்மாண்ட் நகரில் இன்று இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தப் பகுதிக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்து வரும் முக்கிய நீர் மின் நிலையமான இதன் மீது இன்று காலை குண்டுகளை வீசித் தாக்கினர்.
இதில் மின் நிலையமும் பலத்த சேதமடைந்தது. குண்டுகள் வெடித்ததில் பலர் பலியாகியுள்ளனர். இதுவரை இரு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications