பஹ்ரைனில் இந்திய தூதரகத்துக்கு புது பில்டிங் கட்ட முடிவு
துபாய்: பஹ்ரைனில் இந்திய தூதரகத்துக்கு புதிய பில்டிங் கட்டுவதற்கான பிளான் ஏப்ரல் மாதத்துக்குள் இறுதி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டிலேயே கட்டுமானம் துவங்குகிறது.
இதுகுறித்து பஹ்ரைனுக்கான இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
"பஹ்ரைனில் பல கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் இந்திய தூதரகத்துக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுகிறது. கட்டட பிளான் தேர்வு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இறுதி செய்யப்படும். இந்த ஆண்டிலேயே கட்டுமானம் துவங்கிவிடும்.
இந்த வளாகத்தில் தூதர் இல்லம், கலாசார மையம், நூலகம் மற்றும் ஒரு பெரிய அரங்கம் உள்ளிட்டவை கட்டப்படுகிறது.
வெளியுறவுத் தொடர்பான தூதரகசேவை அதிகரித்துவிட்டதாலும், மக்கள் வரத்து பெருகிவிட்டதாலும் விலாசமான இடவசதியுடன் தூதரக அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் வேலைசெய்யும் இந்தியத் தொழிலாளர்கள் விரும்பினால் அவர்களது பாஸ்போர்ட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பிரத்யேகமான இடவசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications