ரணில் ஆட்சியைக் கலைத்தது பெரும் தவறு-சந்திரிகா
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை கலைத்தது நான் செய்த பெரும் தவறு என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் 2 பெரிய தவறுகளையும் தான் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.
புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது தான் செய்த முதல் பெருங்குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்ததும் தவறு என்று கூறியுள்ளார். 3வதாக தான் செய்த தவறை தற்போது கூற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், காலம் வரும்போது அதையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இனப்பிரச்னையில் இருதரப்பிலும் பலி அதிகமாகி வருகிறது. இதற்கு தீர்வுகாண ஆளும் ஸ்ரீலங்கா தேசிய கட்சியும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பாடுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தை உருவாக்கியதால் அதன் மீது எனக்கு பாசம் அதிகம் உண்டு. ஆனால் எதிர்காலத்தில் நானோ, எனது சகோதரி சுமித்ராவோ தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.
தற்போதைய அரசின் சில கொள்கைகள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications