குடிநீரில் மாசு: காலராவுக்கு ஒருவர் பலி-200 பேருக்கு வாந்தி, பேதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மாசு கலந்த கலப்பட குடிநீரை குடித்ததால் காலரா ஏற்பட்டு ஒருவர் பலியானார். 200 பேர் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்பத்தூர் மலர்குளத்தில் போர்வெல் போடப்பட்டு அதன் முலம் புதியம்புத்தூர், நடுவங்குறி்ச்சி, சாமிநத்தம், ராஜாவின் கோவில் உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக போர்வெல் தண்ணீருடன் மாசு கலந்த குளத்து நீரும் சேர்ந்து சப்ளையானதால் பொதுமக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 200 பேர் பாதிக்கப்பட்டு புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகல் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூர் கீழத்தெருவை சேர்ந்த அழகர்சாமி இறந்தார்.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தி்த்து தமிழக கால்நடை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications