மின் வேலியை தொட்ட பெண் சாவு
விகேபுரம்: சட்டவிரோதமாக வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்ட பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆசிர்வாதம். மலையடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருந்த இவரது விளைநிலத்தில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. எனவே விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தனது நிலத்தைச் சுற்றிலும் உயர் அழுத்த மின்வேலி அமைத்திருந்தார்.
இதை அறியாமல் வயலுக்கு சென்ற அவரது தம்பி மனைவி மதியம்மை மின்வேலியை தொட்டுவிட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார்.
இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த குற்றத்துக்காக
முண்டன்துறை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விவசாயி ஆசிர்வாதத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.












Click it and Unblock the Notifications