ஹிண்ட்ராப் தலைவர்களை விடுவிக்க மலேசிய அரசு மீண்டும் மறுப்பு
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மீண்டும் மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு விடுத்த கோரிக்கையை அந்நாட்டு உள்துறை அமைச்சர் அல்பார் நிராகரித்து விட்டார்.
ஹிண்ட்ராப் நிர்வாகிகள் மனோகரன், உதயகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மனோகரன் சட்டசபைத் ேதர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே மக்களின் தீர்ப்பை மதித்து ஐந்து பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேபோல இதுவரை ஐந்து பேரின் கைதையும் ஆதரித்துப் பேசி வந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் டத்தோ சாமிவேலுவும் ஐந்து பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே ஐந்து பேரின் விடுதலையும் சாத்தியமில்லை என்று கூறி விட்ட மலேசிய அரசு மீண்டும் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறுகையில், ஐந்து பேரும் தொடர்ந்து சிறையில்தான் இருப்பார்கள். மலேசிய இந்திய காங்கிரஸ் விடுதலை செய்யுமாறு கோருவது அதன் உரிமை. அதை நாங்கள் தடுக்க முடியாது.
ஆனால் ஐந்து பேரையும் விடுதலை செய்வது என்பது அரசின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. இதுதொடர்பாக எடுக்கப்படும் எந்த முடிவும் எனது தனிப்பட்ட முடிவு அல்ல. இது சட்டரீதியாக, சட்டப்படி எடுக்கப்பட்ட முடிவு. நான் நாட்டின் பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் பாதுகாக்கத்தான் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
சாமிவேலு மூத்த அரசியல்வாதி, ஒரு தேசிய கட்சியின் தலைவர். எனவே அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. இருப்பினும் எங்களது பொறுப்பிலிருந்து நாங்கள் விலக முடியாது என்றார் அல்பார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications