தமிழக ரயில்களையும் தடுப்போம்-கன்னட ரக்ஷன வேதிகே

Subscribe to Oneindia Tamil

Narayanagowda
பெங்களூர்: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களை ஓட விடாமல் தடுப்போம் என கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கூறியுள்ளார்.

கெளடாவின் தலைமையில் இலக்கியவாதிகள், கன்னட பிரமுகர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள்,

கர்நாடகாவின் நிலம், நீர் போன்றவற்றை ஆக்ரமிக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்திற்கு எதிராக முழு அளவில் போராட்டம் நடத்த கன்னட இயக்கத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றனர்.

நாராயண கெளடா பேசுகையி்ல்,

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களை ஓட விட மாட்டோம். நெடுஞ்சாலைகள் பந்த் நடத்துவோம். தமிழர்களின் நிறுவனங்களை நடத்த விடாமல் தடுப்போம்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்னவென்றால், ஓகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.

கன்னட சேனை:

அதே போல குமார் தலைமையிலான கன்னட சேனை என்ற அமைப்பின் கூட்டத்தில், ஓகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு சாதகமான தீர்வு ஏற்படும் வரை தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தவும்,

மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடுவது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+