டிவி நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த மதிமுக கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் கலாசார சீரழிவு ஏற்படுதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் ம.தி.மு.க. யுறுத்தியது.
தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மதிமுக உறுப்பினர் வீர.இளவரசன்,
அரசு பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. உட்காருவதற்கு பெஞ்சுகள் இல்லை. மரத்தடியில் உட்கார்ந்து படிக்கிறார்கள். சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை.
இலவச தொலைக்காட்சியை வழங்குவதை மட்டும் அரசு குறிக்கோளாக கொள்ளக்கூடாது. அதில், வரும் நிகழ்ச்சிகளால் கலாசாரம் சீரழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நிவாரண நிதி உடனடியாக கிடைத்துவிடுகிறது. அதுபோல், முதல்வர் நிதியும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சபாநாயகருடன், சிவபுண்ணியம் மோதல்:
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் சிவபுண்ணியம் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் எழுந்ததுமே 10
நிமிடம்தான் உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர்
ஆவுடையப்பன் கூறினார். ஆனால், தனத்து கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என சிவபுண்ணியம் கோரியதை சபாநாயகர் ஏற்கவில்லை.
பின்னர், ''பேச வந்ததே மறந்து போச்சே'' என்றபடி பேசத் தொடங்கினார் சிவபுண்ணியம். 9 நிமிடங்கள் ஆன நிலையில், ''இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கு'' என்றார் சபாநாயகர். ''ஒரு நிமிடத்தில் என்ன பேசுவது? அதற்கு பேசாமலேயே உட்கார்ந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டு சிவபுண்ணியம் சட்டென்று உட்கார்ந்துவிட்டார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன், நீங்க சீனியர் லீடர்...'' என்று பேச முற்பட்டபோது, அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டத்தில் பேச ஒதுக்கப்பட்ட ளவுக்கு பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அங்கே ஒன்று, இங்கே ஒன்று என இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் நான் அவையை புறக்கணிப்பேன்'' என்று சிவபுண்ணியம் கோபமாக கூறினார்.
அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, ஒகேனக்கல் பிரச்சினை பற்றி ஒன்றேகால் மணி நேரம் விவாதம் நடந்தது. அதில் சிவபுண்ணியம் 10 நிமிடம் பேசினார். நேரம் குறைவாக உள்ளது. இதுகடைசி நாள். உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று அமைதிப்படுத்தினார். அதன்பிறகு சிவபுண்ணியத்துக்கு பேச அனுமதி தரப்பட்டது.