For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுகளை கண்டித்து சேலத்தில் வைகோ உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ சேலத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தார்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதிமுக சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பொதுச் செயலர் வைகோ தலைமையில் தொடங்கிய உண்ணாவிரதத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றினார்.

மாநில அரசுகள் விவசாயிகளின் துயரை துடைக்கவில்லை. தொடர் மின்வெட்டு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த அரசுகள் தவறிவிட்டன. இதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக வைகோ தெரிவித்தார்.

அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுலோசனா சம்பத் பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X