ஆர்ப்பாட்டம் நடத்திய 1500 என்எல்சி ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த 1,500க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள உயர்வு, நிரந்தர பணி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிர்வாக தரப்புக்குக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஊழியர்கள் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் நேற்று மீண்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications