மதுரை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே கிராமத்துக் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
மதுரை அருகே உள்ள பன்னியான் கிராமத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த கலையரசி (11), அவரது தங்கை மோனிஷா (8), தோழி மகேஷ்வரி (11) ஆகிய மூவரும் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் 3 பேரும் மூழ்கி விட்டனர். இதையடுத்து அங்கு கிராம மக்கள் திரண்டுவந்தனர். மூழ்கிய சிறுமிகளில் நாகலட்சுமி என்ற சிறுமியை மட்டும் உயிருடன் காப்பாற்றினர். ஆனால் மற்ற மூன்று பேரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications