For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வினியோக கழகத்தை அரசே நடத்தும்-ஆற்காடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அமையவுள்ள மின்விநியோக கழகத்தை முழுக்கமுழுக்க அரசே ஏற்றுநடத்தும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பதிலளித்து பேசுகையில்,
"தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மின்சார விநியோகக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக சில உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஆனால் இந்த கழகத்தை முழுக்க முழுக்க அரசே ஏற்றுநடத்தப் போகிறது.

மின்வாரிய தலைவரே இந்த கழகத்துக்கும் தலைவராக பொறுப்பு வகிப்பார். நிர்வாக இயக்குநராக மின்விநியோக தலைமை பொறியாளர் நியமிக்கப்படுவார்.

தேவைப்பட்டால், எதிர்காலத்திலும் அரசே தொடர்ந்துவகையில் சட்டம்கூட இயற்றுவோம்" என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X