புகை பிடிப்பது போல போஸ்: அமிதாப் நிரபராதி!

Subscribe to Oneindia Tamil

பனாஜி: சிகார் பிடிப்பது போன்ற போஸ்டர் தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் மீது பனாஜி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தேதிய புகையிலை ஒழிப்புக் கழகம் (நோட்) சார்பில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலர் மீது பனாஜி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், அமிதாப் பச்சன் சிகார் பிடிப்பது போன்ற போஸ் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இது கோவை மாநில புகை பிடிப்பது மற்றும் எச்சில் துப்பும் தடை சட்டத்திற்கு விரோதமானது.

பொது இடத்தில் புகை பிடிப்பது போன்ற விளம்பரத்தில் இடம் பெற்றதன் மூலம், இளைய தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்துள்ளார் அமிதாப் பச்சன். எனவே அமிதாப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர்களும், விளம்பரப் பலகைகளும் கோவா தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது.

இந்த வழக்கை மாவட்ட நீதிபதி பாக்ரே விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் அமிதாப் பச்சனை விசாரிக்க தேவையான முகாந்திரம் இல்ைல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+