கருணாநிதி அறிவிப்பு எதிரொலி-கர்நாடக பந்த் கைவிடப்பட்டது
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளட செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு ஓகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. எனவே எங்களது பந்த் போராட்டத்தையும் நாங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.
மேலும் மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.
இருப்பினும் ஓகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர முயன்றால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்த பிறகும் கூட இந்தத் திட்டத்தை தொடர விடக் கூடாது. தொடரவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications