காஞ்சிபுரம் அருகே அரசு பஸ்கள் மோதல்-2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 2 அரசு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கண்டக்டர் மற்றும் பெண் ஒருவரும் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், திட்டக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சும் காஞ்சிபுரம் அருகே மோதி விபத்துக்குள்ளாயின. ஜானகிபுரம் என்ற இடத்தில் இரண்டு பஸ்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்தது.
இதில் திருவண்ணாமலை பஸ் கண்டக்டர் ஏழுமலை பரிதாபமாக இறந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி என்ற பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த 13 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications