மேல்மலையனூர் கோவில் விழா நெரிசலில் பக்தர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் விழா நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் பலியானார்.
மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசைத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி விசேஷமானது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சனிக்கிழமை நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.
ஊஞ்சல் உற்சவத்தைக் காண பெங்களூரைச் சேர்ந்த சிவலிங்கம் (38) என்பவர் தனது மனைவி கெளசல்யா, மகன்களுடன் வந்திருந்தார்.
அப்போது மகன் சக்திவேல் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தான். இதையடுத்து அவனைத் தூக்க கீழே குணிந்தார் சிவலிங்கம். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிவலிங்கத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications