நடுக்கடலில் 5 தமிழக மீனவர்கள் கைது- இலங்கை ராணுவம் அடாவடி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5ம் தேதியன்று 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இந்திய எல்லையோரமாக நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வந்த சிங்கள கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். அந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி பிராங்க்ளின், அந்தோணிராஜ், நாகராஜன், பாலுச்சாமி, குமார் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் சார்பாக 'நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு' தலைவர் அருளானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+