மத்திய நிபுணர் குழு ஆய்வு முடிந்தது - அமைச்சருடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய குழு கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தது.
உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான இக் குழு, ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை வந்தது.
இன்று நிபுணர் குழுவினர் தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சிறப்பு வருவாய்த் துறை செயலர் சக்தி காந்ததாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிபுணர் குழுவினர் தங்களது ஆய்வு குறித்து தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்ட விளக்கத்தை அரசு சார்பில் அளிக்கப்பட்டது.
மத்திய அரசிடம் விரைவில் நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications