வன்னியில் கடும் மருந்து தட்டுப்பாடு-தமிழர்கள் கண்ணீர்
கிளிநொச்சி: இலங்கையின் வன்னி பகுதியில் அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் தட்டுப்பாட்டினால் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தமிழர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு வாழும் தமிழர்களுக்கு மருத்துவ சேவையை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக பிராந்திய சுகாதாரத்துறை பொறுப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
இலங்கை ராணுவ அமைச்சக உத்தரவுப்படி, வன்னிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மருந்துப் பொருட்களை வவுனியா மற்றும் ஓமந்தை சோதனைச் சாவடியிலேயே சிங்களப் படையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.
2008 மார்ச் வரையிலான காலத்துக்கு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மருந்துகள் இன்னும் வந்து சேரவில்லை. ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே வந்து சேர்ந்திருக்க வேண்டிய மருந்துகள் இப்போது ஏப்ரல் மாதமாகியும் வந்து சேரவில்லை.
இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் வவுனியாவில் இந்த மருந்துகள் தேங்கிக் கிடக்கின்றன.
குழந்தைகளுக்கான சாதாரண நோய் எதிர்ப்பு மருந்தான 'அமாக்சில் சிரப்' பாட்டில்கள், நீரிழிவு மருந்துகள்கூட கையிருப்பில் இல்லை. இதனால் நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
போர் நிறுத்தத்தின்போது முல்லைத்தீவு சுகாதாரத்துறைக்கு இலங்கை அரசு தடையில்லாமல் ஒதுக்கிய எரிபொருளின் அளவு இப்போது கணிசமாகக் குறைந்துவிட்டது.
முல்லைத் தீவு பகுதிக்கு தினமும் 14,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த எரிபொருளை வைத்துதான் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை, 2 துணை மருத்துவமனைகள் மற்றும் 6 மருந்துக்கிடங்குகளின் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளும் அடங்கும்.
எனவே அவசர சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான இந்த சூழலில் முல்லைத் தீவு தேவைக்காக அன்றாடம் 2,750 லிட்டர் எரிபொருளை மட்டுமே இலங்கை அரசு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் கண்மூடித்தனத்தினால் வன்னிப் பகுதியில் தமிழர்கள் படும் அவஸ்தைகளை பல தடவை முறையிட்டும் பலனில்லை. ஐநா சபை மனித உரி்மை அமைப்புகளுக்கு இந்த அவலங்கள் எல்லாம் தெரியவில்லையா? குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ வசதியை அளிக்கும் பொறுப்பை அவை எப்படி நிறைவேற்றப்போகின்றன?
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி எந்தவொரு நாடும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவியை அளிக்கத் தவறக்கூடாது என்ற விதி இலங்கையில் மீறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைக்கூட இலங்கை அரசு மறுத்துவருகிறது. இந்த கொடூரமான மனித உரிமைகள் மறுப்பை சர்வதேச அமைப்புகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications