சென்னையில் ஏப். 25ல் டாஸ்மாக் ஊழியர்கள் பேரணி!
Subscribe to Oneindia Tamil
சேலம்: 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜம்பு கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
பணியில் சேரும் போது டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை அரசு 3 சதவீத வட்டியுடன் வழங்குவதற்கு பதில் 8.5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் .
மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி அன்று சென்னையில் மாபெரும் பேரணி எம்பி குப்புசாமி தலைமையில் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications