சிறுவன் ஓட்டிய கார் மோதி தந்தை பலி
சேலம்: சேலத்தில், 6 வயது சிறுவன் விளையாட்டாக கார் ஓட்டியபோது, அந்தக் கார் மோதி சிறுவனின் தந்தை உயிரிழந்தார்.
சேலம் மாரமங்கலத்துப்பட்டி, பெரியபூசாரியூரைச் ேசர்ந்தவர் அழகப்பன் (33). இவர் ஒரு விவசாயி. இவருக்கு வளர்மதி என்கிறமனைவியும், நந்தகுமார் என்கிற மகனும் உள்ளனர்.
நேற்று மதியம், அழகப்பன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தார். அப்போது அவரது காரில் ஏறிய நந்தகுமார் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கார் சாவியைப் போட்டு ஸ்டார்ட் செய்துள்ளான்.
மேலும் கார் திடீரென படு வேகத்தில் கிளம்பி, கட்டிலில் படுத்திருந்த அழகப்பன் மீது ஏறியது. இதில் கட்டிலோடு வீட்டுச் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார் அழகப்பன்.
சுவற்றில் மோதிய கார், அதை இடித்து அருகில் உள்ள சுவரில் மோதி நின்றது. நந்தகுமார் காயமின்றி உயிர் தப்பினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications