குஜராத் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 41 மாணவ-மாணவிகள் பலி
குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச் சென்று கொண்டிருந்தனர். இதில் மேலும் பல பயணிகளும் இருந்தனர்.
போடேலி அருகே நர்மதை ஆற்றுப் பாலத்தில் பேருந்து சென்றபோது திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது.
இதில் 32 மாணவிகள், 9 மாணவர்கள், பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் மேலும் ஒரு பெண் பயணி ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர்.
சில மாணவர்கள் நீந்து கரை சேர்ந்துவிட்டனர்.
மீட்புப் படையினர் வெகு நேரம் போராடி பஸ்ஸை கிரேன் மூலம் ஆற்றிலிருந்து மீட்டனர். அதிலிருந்த மாணவிகள், மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் தீயணைப்புப் படையினரும் அப் பகுதியினரும் ஆற்றுக்குள்ளும் உடல்களைத் தேடி வருகின்றனர்.
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயிரிழப்பு 50க்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆற்றுக்குள் கவிந்ததில் அந்த பஸ் முழுவதுமாக உருக்குலைந்துவிட்டது. பலியான குழந்தைகள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.













Click it and Unblock the Notifications