டெல்லியில் ஓடும் காரில் பெண் கற்பழிப்பு
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை கற்பழித்த அவரது கணவனின் நண்பர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியைச் சேர்நத 40 வயதான ஒரு பெண் நேற்று இரவு 9 மணிக்கு மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வழியில் அவரது கணவரின் நண்பர் ஆரிப் காரில் சென்று கொண்டிருந்தார். வீட்டில் விட்டுவிடுவதாக ஆரிப் கூறியதை நம்பி அந்த பெண்ணும் காரில் ஏறினார். காரில் ஏறியபிறகு பார்த்தபோது உள்ளே மேலும் 3 ஆண்கள் இருந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இறங்க முயற்சிப்பதற்குள் காரை வேகமாக ஓட்டினார் ஆரிப்.
இந்நிலையில் அந்த பெண்ணை காருக்குள் வைத்து 4 பேரும் கற்பழித்தனர்.
பின்னர் சாலையோரத்தில் அந்த பெண்ணை வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியது. தற்போது கவலைக்கிடமான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications