கடையநல்லூரில் வாந்தி-பேதிக்கு பெண் பலி
கடையநல்லூர்: கடையநல்லூரில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக பலியானார். மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், கடந்த சில மாதங்களாக கடையநல்லூரின் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரம் கேடு நிலவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள், கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மேலக்கடையநல்லூரில் வேதங்கோயில் தெருவைச் சேர்ந்த சங்கிலி என்பவரின் மனைவி திருமலை வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
அவருடைய மகள் காளியம்மாள், அதே பகுதியை சேர்ந்த மாரி ஆனந்தன், வேணி, கருப்பையா, வீரம்மாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி,. பேதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.