காஞ்சிபுரம்-முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரயில்வே கேட் அருகே உள்ள புதரில் போடப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் நாதப்பேட்ைட ரயில்வே கேட் அருகில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்ற ராஜாத்தி என்ற பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு தேடியுள்ளார். அப்போது கேட் அருகே உள்ள ஒரு முட்புதலில் பிறந்து ஒரு நாளே ஆகியிருந்த பச்சிளம் பெண் குழந்தை அங்கு கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்தக் குழந்தையை மீட்டனர். குழந்தையைப் போட்டு விட்டுச் சென்ற கொடுமைக்காரப் பெற்றோர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications