விவசாயியை கொலை செய்த 3 பேருக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
சேரன்மகாதேவி: வீரவநல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீரவநல்லூர் வடக்கு ரோட்டு தெருவை சேர்ந்த விவசாயி ஆதிமூலம். இவர் மற்ற விவசாய நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார், முருகன், நம்பி ராஜன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தினகரன் பரிந்துரைத்தார். பரிந்துரையை ஏற்று குண்டாசில் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications