பிளஸ் 2 பொதுத்தேர்வில் 4 பாடங்களில் கிரேஸ் மார்க்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த மார்ச் 3ல் இருந்து மார்ச் 24 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்ததன. சுமார் ஆறு லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதில் வேதியியல், உயிரியல், தாவிரவியல் மற்றும் வணிகக் கணித வினாத்தாள்களில் சில தவறான, நீக்கப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அச்சுப் பிழையினாலும் சில கேள்விகளுக்கு விடைகள் தவறாக இருந்தன.
இதுபற்றி தேர்வு நடந்தபோதே மாணவர்கள் ஆட்சேபங்களைத் தெரிவித்தனர். பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்களை கல்வித்துறை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி வேதியியல் பாடத்துக்கு 6 மதிப்பெண், உயிரியலுக்கு 1, தாவரவியலுக்கு 5 வணிக கணிதத்துக்கு அதிகபட்சமாக 6 மதிப்பெண்கள் என மொத்தம் 18 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications