22ம் தேதி மிஸ் கூவாகம் போட்டி
விழுப்புரம்: புகழ் பெற்ற மிஸ் கூவாகம் போட்டி வருகிற 22ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில்ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான அரவாணிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவர்.
கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அரவாணிகளுக்கான அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அழகிப் போட்டி வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ளது.
22ம் தேதி காலை மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் கேசிபி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அன்று இரவு கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நடக்கிறது. மறு நாள் தேர்த் திருவிழா நடைபெறும்.
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி தவிர நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி விழுப்புரம் மற்றும் கூவாகத்தில் அரவாணிகள் குவிந்து வருகின்றனர். ஜோடி ஜோடியாக கடைகளுக்குச் சென்று டிரஸ்கள் வாங்குவது, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் அவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications