சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை: பாக்.
இஸ்லாமாபாத்: சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரப்ஜித் குடும்பத்தினர் அவரை காப்பாற்றும்படி மத்திய அரசிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்துப் பரிசீலித்த அதிபர் முஷாரப், மே 1ம் தேதி வரை தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தற்போது இந்தக் கெடு முடிவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க இந்தியா மீண்டும் கோரியுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு மாதத்திற்கு தூக்குத் தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேஷி கூறுகையில், தூக்கு தண்டனையை தள்ளி வைப்பது குறித்து அதிபரிடம் இருந்த எந்த உத்தரவும் வரவில்லை என்றார் அவர்.
அதிபர் முஷரப் மனது வைத்தால் மட்டுமே சரப்ஜித்தை காப்பாற்ற முடியும் என்று அவரது வக்கீல் அப்துல் அமீது கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த பிரச்னையில் தற்போது உதவி வரும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அன்சர் பர்னேன், சரப்ஜித்துக்கு பொது மன்னிப்பு கோரி மீண்டும் மனு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்











Click it and Unblock the Notifications