சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை: பாக்.
இஸ்லாமாபாத்: சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரப்ஜித் குடும்பத்தினர் அவரை காப்பாற்றும்படி மத்திய அரசிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்துப் பரிசீலித்த அதிபர் முஷாரப், மே 1ம் தேதி வரை தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தற்போது இந்தக் கெடு முடிவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க இந்தியா மீண்டும் கோரியுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு மாதத்திற்கு தூக்குத் தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேஷி கூறுகையில், தூக்கு தண்டனையை தள்ளி வைப்பது குறித்து அதிபரிடம் இருந்த எந்த உத்தரவும் வரவில்லை என்றார் அவர்.
அதிபர் முஷரப் மனது வைத்தால் மட்டுமே சரப்ஜித்தை காப்பாற்ற முடியும் என்று அவரது வக்கீல் அப்துல் அமீது கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த பிரச்னையில் தற்போது உதவி வரும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அன்சர் பர்னேன், சரப்ஜித்துக்கு பொது மன்னிப்பு கோரி மீண்டும் மனு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications