புதுச்சேரியில் பட்டப் பகலில் படுகொலை
புதுச்சேரி: பிரான்ஸைச் சேர்ந்த 50 வயது நபர் புதுச்சேரியில் இன்று பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பிரான்ஸில் வசித்து வந்தவர் ராஜாராம். நேற்றுதான் புதுச்சேரிக்கு வந்திருந்தார். இன்று காலை வாடகைக்கு ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு பஸ் நிலையம் வந்தார். ஆட்டோ, மிஷன் தெரு சந்திப்பில் வந்தபோது ஒரு ஜீப் குறுக்கே வந்து ஆட்டோவை மறித்தது.
பின்னர் ஜீப்பில் வந்த நான்கு பேர் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் பயங்கர ஆயுதங்களால் ராஜாராமை கொடூரமாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
பிறகு அவர் வைத்திருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்று விட்டது. சொத்து தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. திமுக உறுப்பினர் சிவக்குமார் இந்த படுகொலை பிரச்சினையை சட்டசபையில் எழுப்பினார். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்ட நிலையில், அவற்றைத் தடுக்க போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேட்டார்.












Click it and Unblock the Notifications