குழந்தை மாறாட்ட சர்ச்சை-இன்று டிஎன்ஏ சோதனை
சென்னை: சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு இன்று டிஎன்ஏ சோதனை செய்யப்படவுள்ளது.
சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி காமாட்சி என்ற பெண்ணுக்கும், பரக்கத் பேகம் என்ற பெண்ணுக்கும் குழந்தைகள் பிறந்தன.
ஆனால் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் மாறி விட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போராட்டமும் வெடித்தது.
இதையடுத்து டிஎன்ஏ சோதனைக்கு குழந்தைகளை உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜார்ஜ்டவுன் 16வது நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல்ச செய்தனர். அதைப் பரிசீலித்த நீதிபதி சுஜாதா, நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் வந்தார். அங்கு விசாரணை நடத்திய அவர் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து இரு குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் ஆகியோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இன்று டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது. முடிவு தெரிய ஒரு வாரமாகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பிறந்த குழந்தைதகள் இரண்டும் தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்து வருவதால் மிகவும் பரிதாபமாக உள்ளன. இரு தாய்மார்களிடமிருந்தும் நேரடியாக அந்தக் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை.
அந்தத் தாய்களிடமிருந்து தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தத் தாயின் பால், எந்தக் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை மருத்துவமனை தரப்பில் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications