ஆப்கானிஸ்தானில் 2 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தல்
காபூல்: ஆப்கானிஸ்தானில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சாலை போடும் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த 12ம் தேதி தமிழர் கோவிந்தசாமி உள்ளிட்ட இரு இந்தியர்களை, மனித குண்டு மூலம் தலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் 2 இந்தியத் தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒரு டாக்சி டிரைவர் நேற்று மாலை கடத்திச் செல்லப்பட்டதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
காபூலை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்களை கடத்திச் சென்றதாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவிக்கின்றனர். கடத்தியது யார் என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications