இலங்கையில் ராணுவம்-புலிகள் பயங்கர சண்டை-67 பேர் பலி
ஆனால், தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் புலிகள் தரப்பில் 52 பேர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு யாழ்பாணத்தின் கிளாகி, முகமலை பகுதிகளில் ராணுவத்தி்ன் 55, 53வது படைப் பிரிவுகளைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் திடீரென முன்னேறி தாக்குதல் நடத்தினர்.
மேற்கே கிளாலியில் ஆரம்பித்து முகமாலை வழியாக கிழக்கே கண்டல் வரை சுமார் 7 கிமீ தொலைவுக்கு இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை நடத்தினர்.
ராக்கெட் வீச்சு, பீரங்கி-ஆர்ட்டிலரி தாக்குதல்கள் நடத்தியபடி கவச வாகனங்களில் ராணுவத்தினர் முன்னேறினர்.
இதையடுத்து புலிகள் பயங்கர பதிலடி தாக்குதல் நடத்தினர். இதனால் ராணுவத்திணரால் மேலும் முன்னேற இயலவில்லை.
இன்று பகல் 1 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 38 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 84 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
ஆனால், புலிகளில் 52 பேர் பலியாகிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் 74 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
புலிகள் வசமிருந்த சில பகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை தங்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தனது தரப்பில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
இந்த சண்டையைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் உடலங்கள் சிதறிக் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலை நடத்தியபோது புலிகள் வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியான வீரர்களின் உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?













Click it and Unblock the Notifications