For Daily Alerts
Just In
தேவர் சிலை: மதுரையில் சேதுராமன் உண்ணாவிரதம்
மதுரை: மதுரை முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மதுரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் தலைமையில் அண்ணா பஸ் நிலையம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேவர் சிலைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்ைக விடுத்தனர்.
டாக்டர் சேதுராமன் பேசுகையில், இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் முதல்வர் கருணாநிதி மதுரைக்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
Comments
Story first published: Wednesday, April 23, 2008, 18:45 [IST]