சிறுநீரகக் கோளாறு - மருத்துவமனையில் எல்.கணேசன்
தஞ்சாவூர்: திருச்சி எம்.பியும், மதிமுகவின் முன்னாள் அவைத் தலைவருமான எல்.கணேசன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவில் அவைத் தலைவராக இருந்தவர் எல்.கணேசன். திருச்சி எம்.பியாகவும் இருக்கிறார். மதிமுகவிலிருந்து இவரும், செஞ்சி ராமச்சந்திரனும் விலகி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அவைத் தலைவராக கணேனும், பொதுச் செயலாளர் செஞ்சியாரும் உள்ளனர்.
இவர்களது தரப்பில் தேர்தல் ஆணையத்தில் நாங்கள்தான் மதிமுக என்று அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனு நேற்று முன்தினம்தான் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில் எல்.கணேசனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்.கணேசன் திருச்சி எம்.பியாக இருந்தபோதிலும், தஞ்சையில்தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.