சென்னையில் மாபெரும் மகளிர் சுய உதவிக் குழு விற்பனை வளாகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநில அளவிலான மாபெரும் பொருட்காட்சி- விற்பனை வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஸ்டாலின் கூறுகையில்,

தமிழக அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 1.5 லட்சம் பேருக்கு ரூ. 150 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய 29 மாவட்டங்களில் தலா ரூ.28 லட்சம் செலவில் மகளிர் சுய உதவிக்குழு வணிக வளாகம் கட்டப்படும்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே 34,300 சதுர அடி பரப்பளவில் ரூ.10.7 கோடி செலவில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநில அளவிலான பொருட்காட்சி மற்றும் விற்பனை வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+