போலீசை தாக்கிய வழக்கு-21 ஆண்டுக்கு பின் ஜான்பாண்டியன் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: போலீசை தாக்கிய வழக்கு விசாரணையில் 21 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை நீதிமன்றத்தில் ஜான்பாண்டியன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை கோர்ட் வாளகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் கல்வீசி தாக்கப்பட்டனர். இதையடுத்து ஜான்பாண்டியன் உள்ளிட்ட 79 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நெல்லை மாவட்ட 2-வது செசன்சு கோர்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்தது. சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications