கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் சட்டம்
சென்னை: கூரியர் சேவையை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராசா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மின்னணு சர்வதேச மணி ஆர்டர் சேவையை இன்று சென்னையில் ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதுதொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பல்வேறு துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது கூரியர் சேவையை முறைப்படுத்த தனியாக சட்டம் எதுவும் இல்லை. எனவே விரைவில் இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்களும், தபால் துறையும் பெரும் பலன் அடைவார்கள்.
மேலும் தபால் துறைக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிற சேவைகளிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம்.
வெறுமனே தபால்களை சுமக்கும் பணியை மட்டும் தபால்காரர்கள் செய்யக் கூடாது. பிற சேவைகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்து மிகப் பெரிய கட்டமைப்பு மற்றும் சொத்துக்களுடன் கூடிய துறையாக தபால் துறை விளங்குகிறது என்றார் அவர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications