விலை உயர்வு- மே 2ல் பாஜக தமிழக பந்த்
சென்னை: விலை உயர்வை கண்டித்து பாஜ சார்பில் மே 2ம் தேதி பந்த் நடத்த அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே அவதிப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் வெங்காய விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறையை மட்டுமே காரணம் காட்டி பாஜக அரசை, காங்கிரஸ் வீழ்த்தியது நினைவிருக்கும். இன்று எல்லா பொருட்களும் விலையும் ஏறியுள்ள நிலையில் இந்த அரசை மாற்றியே ஆக வேண்டும்.
விலைவாசியை குறைத்துக் காட்டு இல்லையேல் ஆட்சியிலிருந்து நடையை கட்டு என்று வலியுறுத்தி மே மாதம் 2ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் ஆகியவற்றை நடத்த இருக்கிறோம்.
இதற்கு பொது மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். அன்று மாலை முக்கிய நகரங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications