பேரனுக்கு சீட் இல்லை - காங்கிரசை துறக்க ஜாபர் ஷெரிப் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சரான ஜாபர் ஷெரீப் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரகாவும் இருக்கிறார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தனது பேரன் வகாபுக்கு சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிடவும், ஆதரவாளர் சிலருக்கு வாய்ப்பு வழங்கும்படியும் கட்சி தலைமையை ஜாபர் ஷெரிப் வலியுறுத்தினார்.
ஆனால் அவர் கூறிய யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் கட்சி தலைமை மீது ஜாபர் ஷெரிப் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்த ஜாபர் ஷெரீப், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பொதுச் செயலர் திக் விஜய்சிங், ஜாபர் ஷெரிப்பை அவரது வீட்டில் சந்தித்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் ஜாபர் ஷெரிப் சமாதானமாகவில்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அல்லது பகுஜன் சமாஜ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் ஜாபர் ஷெரிப் முயற்சிப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications