தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தல்: ஆந்திரா டிஐஜி
திருப்பதி: தமிழகத்தில் இருந்துதான் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுகிறது என்று ஆந்திரா ஊழல் கண்காணிப்பு அமலாக்க டிஐஜி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடப்பதாக பல்வேறு கட்சிளும் குற்றம் சாட்டி வருகின்றன. இப்போது இதை ஆந்திர மாநில டிஐஜி பாலசுப்ரமணியம் உறுதி செய்துள்ளார். தமிழகத்திலிருந்துதான் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அவர் போட்டு உடைத்துள்ளார்.
திருப்பதியில் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் இருந்து ஆந்திரா எல்லையில் உள்ள தடா பகுதி வழியாக நெல்லூர் மாவட்டத்துக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்படுகின்றன.
போலி பில்கள் மூலம் லாரிகளில் இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
அங்கிருந்து கோலார் பகுதி வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அரிசி கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
சமீபத்தில் தமிழகத்தில் நெல்லூர் வழியாக கோலார் பகுதிக்குள் கடத்த முயன்ற 545 மூட்டை ரேஷன் அரிசியை சந்திரகிரி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications