ஒட்டு கேட்பு-தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநர் உபாத்யாயாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதற்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நடந்த போராட்டத்திற்கு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான அதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.















Click it and Unblock the Notifications