அருண்குமாருக்கு வயலார் ரவி 'ரூபத்தில்' ஆப்பு!
சென்னை: காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு உலை வைக்கும் வகையில் செயல்பட்ட தமிழக காங்கிரஸ் பார்வையாளர் அருண் குமாருக்கு ஆப்பு வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அருண் குமாரின் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவரான அருண்குமார் தமிழக காங்கிரஸ் பார்வையாளராக பொறுப்பேற்றவுடன் விஜய்காந்துடன் கூட்டணி பேச்சு நடத்தியதாகக் கூறி அதிர்ச்சி பரப்பினார்.
மேலும் இவருக்கும் காங்கிரசின் எந்த கோஷ்டிக்கும் ஒத்து வரவில்லை. இவர் கட்சி தலைமையகத்துக்கு வந்தால் சத்தியமூர்த்தி பவனின் வாட்ச்மேன்-டீ பாய் தவிர தவிர வேறு யாருமில்லாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறாக கேவலப்படுத்தப்பட்ட அருண்குமாருக்கு விஜய்காந்த் கூட்டணி குறித்து பேசியதற்காக டெல்லியிலும் டோஸ் கிடைத்தது. மேலும் ஆந்திர பிராமணர் என்று தி.க. தலைவர் வீரமணி மூலமாக மறைமுக தாக்குதல் நடத்தியது திமுக.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டார். ஆனால், பல மாதங்களாகியும் அது கிடைக்கவில்லை.
இதனால் தமிழகம் வருவதையே குறைத்துக் கொண்டுவிட்ட அருண்குமார், டெல்லியில் தமி்ழ்ப் பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது சந்தித்து திமுவை 'சும்மாகாச்சுக்கும்' பாராட்டுவதை ஒரு வேலையாக வைத்துள்ளார்.
இந் நிலையில் இவருக்கு அடுத்த ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பை ஏற்ற ரவி சென்னையில் வந்தார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திட மாநில மற்றும் மாவட்டங்களில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனைகள் கேட்கப்படும். கர்நாடக தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசில் மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது.
கோவை மாவட்ட காங்கிரசில் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து மாநில தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு நடத்துவேன்
தமிழகத்தில் காங்கிரசுக்கு புதிதாக கூட்டணி ஏற்பட வாய்ப்பு எதுவும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. இந்த கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிலும் களம் இறங்கும். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications