இலங்கையில் இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு நினைவிடம்

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை, இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டதால், அவர்களுக்கும், இந்தியப் படையினருக்கும் இடையே போர் மூண்டது. இதில் இந்தியப் படைக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் திரும்பப் பெறப்பட்டனர். இந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படையினருக்கு இலங்கை நாடாளுமன்றம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நினைவிடத்தில் இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1,500 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்படவுள்ளன.
மே 22ம் தேதி இந்த நினைவிடம் திறந்து வைக்கப்படும். அல்லது கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நினைவிடத்தைத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் இந்தியப் படையைச் சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். 2,800 பேர் படுகாயமடைந்தனர். பலருக்கு கை, கால் போன்ற உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறியது.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவிடத்தில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications