மாஜி அமைச்சர் ஜோசப் மீதான செக்ஸ் சில்மிஷ வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Lakshmi Gopakumar
சென்னை: கேரள முன்னாள் அமைச்சர் ஜோசப் மீதான செக்ஸ் சில்மிஷ வழக்கு அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த டிவி நடிகையும், செய்தி வாசிப்பாளருமான லட்சுமி கோபகுமார், சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமான பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜோசப், லட்சுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பான வழக்கு சென்னை ஆலந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று நேரில் வந்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.

ஆனால் இன்று ஜோசப் வரவில்லை. அவருக்குப் பதில் அவரது வக்கீல் மட்டும் வந்திருந்தார். இதையடுத்து வழக்கை மே 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் கண்டிப்பாக வந்து குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+