பேநசீருக்கு சர்வதேச அமைதி விருது
டிப்பரேரி (அயர்லாந்து): படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு 2007ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
டிப்பரேரி சர்வதேச அமைதி விருது-2007 வழங்கும் விழா அயர்லாந்தில் நடந்தது. பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சியை மாற்றி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர போராடிய வீரத்துக்காக பேநசீருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பேநசீர் குடும்பத்தினர் சார்பில் அவரது குடும்ப நண்பர் பஷீர் ரியா விருதை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் புதிய அரசின் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் பேநசீர் கணவர் ஜர்தாரி வரமுடியவில்லை. இந்த விருது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், இதை வாங்க பேநசீர் இல்லையே என்ற துக்கம் அதிகமாக உள்ளது என்றார் பஷீர்.
இதற்கு முன் இந்த விருது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் கோர்பச்சேவ், அமெரிக்காவின் முன்னார் அதிபர் பில் கிளிண்டன், லெபனான் முன்னார் அதிபர் ரபீர் ஹரீரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.